தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் தங்க நாணயங்கள் வழங்கும் விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் நிலையில் இந்த விழாவிற்கு நடிகர் விஜய் தலைமை தாங்கியுள்ளார்.

இந்த விழாவின்போது நடிகர் விஜய் பேசியதாவது, அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை செய்ய வேண்டும். தேர்தலில் வாக்கு செலுத்த யாரும் பணம் பெற கூடாது. யுபிஎஸ்சி தேர்வில் பெரியாருக்கே ஜாதி சாயம் பூசம் முயற்சி செய்கிறார்கள்.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் பெரியாருக்கு ஜாதி சாயம் பூசுவது போல் ஒரு கேள்வி கேட்டுள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார். மேலும் ஜாதி மற்றும் மதத்தை வைத்து பிரிவினையை உண்டாக்கும் அந்தப்பக்கம் நீங்கள் போய்விடாதீர்கள். உங்களை அந்த சிந்தனைகள் டிஸ்டர்ப் செய்யாத அளவிற்கு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

விஜயின் பேச்சு குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, பெரியார் படத்திலேயே ராமசாமி நாயக்கர் என்று தான் குறிப்பிடுவார்கள். பெரியாரே நாயக்கர் என்று தான் கையெழுத்திட்டார் என கூறியுள்ளார்.