தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட வெகு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்த நஸ்ரியா, நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்தார். இதையடுத்து மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் நஸ்ரியா, மலையாளத்தில் பிரித்விராஜுடன் “கூடே” மற்றும் தனது கணவர் பஹத் பாசிலுடன் இணைந்து “ட்ரான்ஸ்” போன்ற படங்களில் நடித்தார்.

அதன்பின் நானி நடித்த அண்டே சுந்தரனிகி என்ற படம் வாயிலாக முதன்முறையாக தெலுங்கு சினிமாவிலும் அடியெடுத்து வைத்தார் நஸ்ரியா. தன்னை குறித்த செய்திகள், தன் கணவர் மற்றும் தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போன்றவற்றை தொடர்ந்து சோஷியல் மீடியா வாயிலாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் நஸ்ரியா. இந்நிலையில் லட்சக்கணக்கான பாலோவர்களை கொண்ட நஸ்ரியா, இப்போது சோஷியல் மீடியாவின் அனைத்து தளங்களிலிருந்தும் ஒரு பிரேக் எடுத்துக்கொள்வதாக திடீரென அறிவித்துள்ளார்.