இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரையில் சோலார் பேனல்களை அமைப்பதற்கு எஸ்பிஐ வங்கி கடன் உதவி வழங்குகின்றது. PM சூர்யா கர் திட்டத்தின் கீழ் 10 KW திறன் வரை கடன் வழங்கப்படுகிறது.

3KW வரை சோலார் பேனல் அமைக்க இரண்டு லட்சம் ரூபாய், 3KW முதல் 10 KW வரை சோலார் பேனல் அமைக்க 6 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகின்றது. MNRE/REC இணையதளத்தில் விண்ணப்பத்தாளர் பதிவு செய்வது மூலம் கடன் வழங்குவது வரை எஸ்பிஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறியலாம். கடன் வாங்குபவர் 70 வயதை அடையும் முன்னர் கடனை கட்டி முடிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், 65 வயது வரையிலான நபர்கள் இந்த கடனுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்றும், 680க்கு மேல் சிபில் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.