ஆயுதபூஜை, விஜயதசமி திருவிழாக்கள் காரணமாக நாளை முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பணிபுரியும் பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாமல் அடுத்துள்ள தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி ஆகியவை போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்திருக்கின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.