
சின்னத் திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் ஒருவர் வாணி போஜன். சமீபத்தில் “பாயும் ஒளி நீ எனக்கு” படத்தின் புரொமோஷனுக்காக சென்றிருந்த அவர், பெண்களை தவறாக பார்ப்பவர்கள் பற்றி கோபமாக பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதுகுறித்து அவர் கூறியதவது “நான் பல சிக்னல்களில் பார்த்துள்ளேன்.
பெண்கள் பைக்கில் போகும் போது சேலை கட்டி சென்றால் அவர்கள் மேல் தான் அனைவரது கண்ணும் இருக்கும். அது ஏன் என எனக்கு தெரியவில்லை. சேலை கட்டினாலே இப்படிதான் பார்க்க வேண்டுமா..? வயதான பெண்களை கூட வேறு மாதிரியாகத் தான் பார்க்கின்றனர். அதுபோன்ற ஆட்கள் ஒருபோதும் திருந்தமாட்டார்கள்” என கோபமாக கூறியிருந்தார்.