திருச்சி மாவட்டம் நாச்சாப்புத்தூர் கருங்காடு என்னும் பகுதியில் முத்துக்குமார் (23) என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவநாளன்று இரவு நேரத்தில் முத்துக்குமார் செல்போனில் ஒருவருடன் பேசிக் கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்தார்.

அப்போது அவர் அருகில் இருந்த மின் கம்பத்தில் சாய்ந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை காரில் ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்ததுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.