மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஹேமா லோகாண்டே. இவர் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று உணவருந்தி கொண்டிருந்தபோது செல்போன் பார்த்துக் கொண்டிருந்த ஹேமாவை அவரது தாய் கண்டித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ஹேமா செல்போனை எடுத்துக் கொண்டு மூன்றாவது மாடிக்கு சென்று விட்டார். வெகு நேரம் ஆகியும் ஹேமா கீழே வராததால் குடும்பத்தினர் சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது ஹேமா சிறிய விஷயங்களுக்கும் அதிகம் கோபப்படுவார் என்றும் அதிக நேரம் செல்போனிலேயே மூழ்கி இருப்பார் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.