தமிழ் சினிமா தயாரிப்பாளர் ரவிந்தர். இவர் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் சில படங்களை தயாரித்து உள்ள நிலையில் சீரியல் நடிகை மகாலட்சுமியின் திருமணம் செய்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள ரவீந்தரின் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை ஈடுபட்டிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.