ஆஸ்கார் விருது வென்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்போது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிஸியாக படங்களில் பணிபுரிந்து வருகிறார். அவரது பாடல்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்களுக்காக அடிக்கடி concerம் நடத்துகிறார் ஏ.ஆர்.ரகுமான்.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் சென்னையில் எதற்காக இசை நிகழ்ச்சி நடத்துவது இல்லை என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, “எதற்கெடுத்தாலும் பர்மிஷன், பர்மிஷன் என சொல்லி அனுமதி வாங்கவே 6 மாத காலம் ஆகிறது” என ஏ.ஆர்.ரகுமான் அதிருப்தியுடன் பேசி இருக்கிறார். இதுகுறித்த ரகுமானின் டுவிட் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.