அமைச்சர் செந்தில் பாலாஜி இணையாத ஒரே கட்சி பாஜக மட்டும் தான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார் . இதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் செந்தில் பாலாஜியை பாஜகவில் இணைய சொல்லி அமலாக்க துறையினர் கேட்டதாக கூறியிருந்தார். பாஜகவில் இணையுமாறு அமலாக்கத்துறை நிர்பந்தித்ததாக பொய் சொல்கிறார்கள், ஜாமீன் வேண்டுமென்றால் உங்கள் பிரச்சினையை சொல்லி கேளுங்கள் என்று அண்ணாமலை தற்போது விமர்சித்துள்ளார்.