
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெற்றுள்ள நிலையில் அது தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் சென்னையில் கரையிறங்க முடியாமல் ஏழு விமானங்கள் வானில் வட்டமடித்தது.
டெல்லி, மும்பை, தோகா, மலேசியா, புவனேஸ்வர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஏழு விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தது. மேலும் துபாய், சிங்கப்பூர், மதுரை, தூத்துக்குடி, டெல்லி, கோயம்புத்தூர், புனே, துர்காப்பூர், சிலி குடி ஆகிய விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதில் டெல்லி விமானம் சென்னையில் திரையரங்க முடியாததால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.