
தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் முக்கியமான நலத்திட்டமாகும். இந்தத் திட்டம் தற்போது தமிழகத்தில் மட்டும் 1.14 கோடி குடும்பத் தலைவிகள் பயனடையும் வகையில் செயல்படுகிறது.
மாநில அரசின் வரையறைக்குள் வரும் நபர்களுக்கு இது ஒரு நேரடி நிதி நிவாரணமாக பயன்படுகிறது. இந்த திட்டத்துக்கான தகுதி இருந்தும், பலர் விண்ணப்பிக்காமல் விடுபட்டு உள்ளனர்.
சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட, அதில் பலர் முறையாக தகுதி உள்ளவர்களாக உள்ளனர். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் தகுதி உள்ள பெண்கள் மீண்டும் விண்ணப்பம் தாக்கல் செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்களிடம், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் இருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
தொழில் வரி, ஜிஎஸ்டி போன்றவை செலுத்தக்கூடாது. இதனுடன், அரசு வரையறைத்திட்டம் பூர்த்தியாகும் வகையில் இல்லத்தரசிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். எனவே, தகுதி உள்ள பெண்கள் விண்ணப்பத்தை மறவாமல் பதிவு செய்யுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.