
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றுக்கு அருகே 2 பெண்கள் டாக்ஸியில் வந்தனர். அவர்கள் தங்கள் கையில் பெரிய நீல நிற சூட்கேஸை வைத்திருந்தனர். பின்னர் அதனை ஆற்றுக்குள் வீச அவர்கள் முயன்றனர். இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு அந்த பெண்களை மறித்து சூட்கேஸில் என்ன இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு அந்த பெண்கள் தாங்கள் வளர்த்து வந்த நாய் இறந்து விட்டதாகவும் அவற்றின் உடல் தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் அதனை அவர்கள் நம்ப மறுத்து சூட்கேசை திறக்கும்படி கூறினார். ஆனால் அந்தப் பெண்கள் தயங்கியபடி நின்ற நிலையில் இறுதியாக சூட்கேஸ் திறக்கப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது மனித உடல் பாகங்கள் அந்த சூட்கேஸ் பெட்டியில் இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரின் உடலை கைப்பற்றியதோடு பெண்களையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.