சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் வெறும் டயர் குழாயில் (டயர் டியூப்) பொங்கி ஓடும் ஆற்றில் ராஃப்டிங் செய்வதைக் காணலாம்.

இது சாதாரணமான செயல் இல்லை. தண்ணீரின் ஓட்டம் மிகவும் வேகமாகவும் ஆபத்தாகவும் இருந்தபோதும், அந்த சிறுவன் எந்த அச்சமுமின்றி, அதனை தைரியமாகச் சமாளிக்கிறான். இந்த காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வீடியோவில், பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமல், அந்த சிறுவன் டயர் குழாயில் நின்று, டயரின் அசைவுகளை சமாளித்து பயணிக்கிறான். அருகில் படகில் பயணிக்கும் சிலர் சிறுவனை ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

அந்த சிறுவனின் செயல்பாடு, அவனுக்குள் உள்ள தைரியத்தையும், அனுபவத்தையும் வெளிக்கொணர்கிறது. இந்த வீடியோவை @Psychhshi என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது.

இதனை மில்லியன் கணக்கானோர் பார்த்து, ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளதுடன், பலரும் கருத்துக்களிலும் தங்கள் வியப்பையும் பாராட்டுகளையும் பதிவு செய்துள்ளனர்.

ஒருவர், “இது மிகவும் ஆபத்தான செயல், ஆனால் அவன் தைரியம் அற்புதம்,” என எழுதினார். இன்னொருவர், “திறமை இருந்தால் வயதெல்லாம் தேவையில்லை,” என பாராட்டினர்.