
புதுச்சேரியில் 293 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பால் கறவை இயந்திரம் வழங்கப்பட்டது. புதுச்சேரியில் பால் வளத்தை பெருக்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவின் பேரில் கால்நடை துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுத்தமான பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 100 சதவீத மானியத்தில் பால்கறவை இயந்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டு 293 பயனளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் பயனாளிகளுக்கு கறவை இயந்திரம் பயன்படுத்துவது குறித்து ஒரு நாள் பயிற்சியும் வழக்கப்பட்டது. இதை அடுத்து புதுச்சேரியில் 212 பேர், காரைக்காலில் 46 பேர், இதரப் பகுதிகளில் மொத்தம் 18 பேர் தேர்வு செய்யப்பட்டு 293 பேருக்கு பால் கறவை இயந்திரம் வழங்கப்பட்டது.