திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சிறுவனின் தாய் இரண்டு சகோதரர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்த சிறுவனின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த காரை ஓட்டி வந்த சிறுவனின் தந்தை காயங்கள் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.