
சென்னை மாவட்டம் கௌரிப்பாக்கம் பகுதியில் ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தற்போது ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தற்காப்பு கலையான குங்ஃபூ படிப்பதற்காக வகுப்புக்கு சென்று வந்தேன்.
அப்போது சீரியல் நடிகையான அனாமிகா என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் நானும் அவரும் காதலித்தோம். நான் அவரிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியபோது அவர் தனக்கு நிறைய கடன் பிரச்சினைகள் இருக்கிறது எனவே அதை எல்லாம் சரி செய்தால்தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்றார்.
இதை நம்பி நானும் அவருக்கு அடிக்கடி பணம் கொடுத்த நிலையில் ஒரு கட்டத்தில் அவர் அதிகமாக பணம் கேட்டதால் சண்டை போட்டு இருவரும் பிரிந்து விட்டோம். நான் அவருக்கு 5 லட்ச ரூபாய் வரையில் பணம் கொடுத்த நிலையில் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அவர் பணம் வாங்கவே இல்லை என நாடகமாடுகிறார்.
அவர் யோகி பாபுவின் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். மேலும் அவர் என்னை ஏமாற்றி வாங்கிய பணத்தை மீட்டு தருமாறு தற்போது டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறினார்.