கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்குருவில் டிஎஸ்பி அலுவலகத்திற்கு ஒரு பெண் நில வழக்கு தொடர்பாக புகார் அளிக்க வந்தார். அப்போது அந்த பெண்ணிடம் மதுகிரி டிஎஸ்பி ராமசந்திரப்பா கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த சம்பவத்தை ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி கே.வி அசோக் தெரிவித்துள்ளார்.