நடிகை ராதிகா குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக உரிய நடவடிக்கையை எடுக்கும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, 2 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த நிலையில், தற்போது ராதிகாவை விமர்சித்துள்ளார். இந்த முறை அவரை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது