ஹைதராபாத்தில் உள்ள தப்பாசபுத்திரா பகுதியில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவலிங்கம் உள்ளது. இதன் அருகே கடந்த 11ஆம் தேதி ஒரு ‌ மாமிச துண்டு கிடந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஊரே கலவரமானது. முதலில் மாமிசம் கிடப்பதை பார்த்த கோவில் பூசாரி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்த நிலையில் அந்தப் பிரச்சனையை பாஜகவினர் கையில் எடுத்தனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது தான் உண்மை தெரிய வந்தது. அதாவது ஒரு பூனை இறைச்சி துண்டை எடுத்துக்கொண்டு கோவிலுக்குள் சென்ற நிலையில் அதுதான் சாமி சிலை அருகே அதனை போட்டுள்ளது. இந்த உண்மை தெரிந்த  பிறகு தான் பிரச்சினை அடங்கியது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.