நடிகர் கமல்ஹாசன் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கக்கூடிய இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார் என்று கடந்த வருடமே அறிவிப்பு வெளியாகியது. அண்மையில் காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்துவதற்காக சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் சென்று உள்ளனர். எனினும் வருகிற செப்டம்பர் மாதம் ஜி-20 மாநாடு நடைபெற இருப்பதை முன்னிட்டு நாடெங்கிலும் அனைத்து மாநிலங்களிலும் பல ஊர்களில் கலை விழாக்கள் நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக இதற்கான பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட சிலவற்றை காரணம் காட்டி காஷ்மீரில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பை நடத்த பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். அதனை தொடர்ந்து வேறு வழியின்றி படக்குழுவினர் இப்போது சென்னை திரும்பியுள்ளனர்.