
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர்தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதன் மூலமாக அஜித், விஜய் போன்ற டாப் ஹீரோக்களுக்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் உடன் மதராஸி மற்றும் சுதா கொங்கராவுடன் பராசக்தி படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு விஷயம் வைரலாகி வருகிறது. அதாவது முன்னதாக சிவகார்த்திகேயன் போட்டியாளராக கலந்து கொண்ட நடன நிகழ்ச்சியில் நடிகர் சாம் நடுவராக இருந்தார். ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் அடைந்திருக்கும் உயரம் எவ்வளவு என்று பாருங்கள் என்று பலரும் சொல்லி வருகிறார்கள். இதனையடுத்து நடிகர் ஷியாம் பேட்டி ஒன்றில், ” அவரைப் பார்த்து எனக்கு பொறாமை இல்லை. அவர் இவ்வளவு வளர்ந்திருப்பது எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. எல்லாம் கடவுள் அமைத்து கொடுத்த பாதை தான்” என்று கூறியுள்ளார்.