குஜராத் மாநிலம் வாபி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் வயதான நபர் ஒருவர் தவறுதலாக ரயில்வே ட்ராக்கில் விழுந்துள்ளார். சில மீட்டர் தொலைவில் ரயில் வந்து கொண்டிருந்த நிலையில் ரயில்வே காவலர் வீராபாய் மேரு என்பவர் தனது உயிரை பணயம் வைத்து விரைந்து சென்று அந்த நபரை டிராக்கில் இருந்து இழுத்து காப்பாற்றியுள்ளார். இது தொடர்பான காணொளி வெளியாகி பார்ப்போர் மனதை பதப்பதைக்க செய்துள்ளது.