
சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. பழங்குடியின இனத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இவர் JEE advanced 2025 தேர்வு எழுதி இருந்தார்.
இந்த தேர்வில் தற்போது மாணவி ராஜேஸ்வரி தேர்ச்சி பெற்ற நிலையில் ஐஐடியில் உயர்கல்வி படிக்க தகுதி பெற்றார். இவரது தந்தை கடந்த 2024 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த நிலையில் அவருடைய கனவை நினைவாக்குவதற்காக மாணவி கடுமையாக படித்தார். மேலும் தற்போது மாணவி ஐஐடி மெட்ராஸில் படிக்க இருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.