
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக கட்சியின் எம்பி தயாநிதிமாறனுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கினை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மேலும் அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் இடைக்கால தடையை நீடித்து உத்தரவிட்டுள்ளது.