
உத்தரபிரதேச மாநிலத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள நசர்கர்வா கிராமத்தில் ஜூன் 2ஆம் தேதி சங்கீதா தனது கணவர் கண்ணன் காணாமல் போயுள்ளதாக தேபருவா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் விசாரணையில், இது திட்டமிட்ட கொலை என தெரியவந்துள்ளது.
காவல்துறை தெரிவித்த தகவலின்படி, சங்கீதா தனது கணவரை சிகிச்சை என்ற பெயரில் பால்ராம்பூர் மாவட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு போதை மருந்து கொடுத்து, பின்னர் தனது காதலர் அனில் சுக்லாவுடன் சேர்ந்து கண்ணனை ரப்தி ஆற்றில் தள்ளியுள்ளனர். இதனால் அவரது உயிர் பிரிந்தது.
ஜூன் 10ஆம் தேதி, ரப்தி ஆற்றின் கரையில் செம்ரஹ்னா கிராமம் அருகே ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், அது கண்ணனின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, மரணத்தின் காரணம் குறித்து மேலும் உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதனையடுத்து போலீசார் சங்கீதா மற்றும் அனில் சுக்லா இருவரையும் கைது செய்தனர். விசாரணையின் போது இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) மற்றும் 201 (ஆதாரங்களை அழித்தல்) ஆகியவை உட்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கொடூர சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.