டெல்லியில் ஸ்பைடர்மேன் உடையணிந்த ஒரு இளைஞர் கார் மேல் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் , ஸ்பைடர்மேன் வேடத்தில் இருந்த இளைஞர் மற்றும் கார் ஓட்டுநரை கைது செய்தனர்.

ஸ்பைடர்மேன் வேடத்தில் இருந்த இளைஞர் நஜாஃப்கரைச் சேர்ந்த 20 வயதான ஆதித்யன் என்றும், கார் ஓட்டுநர் மகாவீர் எங்க்ளேவைச் சேர்ந்த 19 வயதான கவுரவ் சிங் என்றும் தெரியவந்துள்ளது.

கார் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் மீது ஆபத்தான ஓட்டுதல், மாசு கட்டுப்பாட்டுச் சான்று இல்லாமல் வாகன ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.