சென்னை மாவட்டம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த கார் சாலையில் உள்ள தடுப்பு சுவற்றில் மோதியது. இதனால் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர். இது குறித்து அறிந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் தீப்பிடித்து இருந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.