தமிழக அரசு பொதுமக்கள் அடிக்கும் தகவல் உள்ளீடுகளைக் கொண்டு நகரத்தின் சாலைகளில் உள்ள பள்ளங்களை அடையாளம் காண உதவும் நம்ம சாலை என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. விபத்தில்லா தமிழகம் என்ற இலக்கை அடைவதையும் தமிழகத்தில் பள்ளங்கள் இல்லாத சாலைகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியின் மூலம் நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களில் புகைப்படங்களை மக்கள் தங்கள் புவியியல் சார்ந்த தகவல்களின் ஒருங்கிணைப்புகளுடன் சேர்ந்து பதிவேற்றம் செய்ய இயலும். அவை பொறியாளருக்கு செயலி மூலமாக தெரிவிக்கப்பட்டு குறித்த கால கெடுவுக்குள் பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் பேரிடர் காலங்களில் மரம் விழுதல் மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவை குறித்தும் புகார் அளிக்க ஏதுவாக செய்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.