
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் நியூசிலாந்து பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதிய நிலையில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த மூன்றாம் நாள் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதிய நிலையில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 50 ஓவர்களில் 236 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரச்சின் ரவீந்திரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து விளாசினார். உலக கோப்பையில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் அடித்த வீரர் என்ற பெருமையை ரச்சின் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஒருவேளை இன்று நடைபெற்ற போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றிருந்தால் அடுத்ததாக வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றிருக்கும். அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இன்று வங்கதேசம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் இருந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில் இந்திய அணியும் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. மேலும் இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் வீரர்கள் சிறப்பான நிலையில் இருப்பதால் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை நிச்சயம் வெல்வார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறார்கள்.