இன்று பெரும்பாலான பெற்றோர்கள், தங்களுடைய குழந்தைகள் சாப்பிடும் நேரத்தில் அவர்களுக்கு மொபைல் போனை கொடுப்பதை வழக்கமாக்கி விட்டனர். “சாப்பிட வைக்க எதையாவது distract பண்ணணும்” என்ற எண்ணத்தோடு குழந்தைகள் அடம் பிடிக்காமல் சாப்பிட வைக்க, YouTube வீடியோ, கார்டூன், விளையாட்டு போன்றவற்றைக் காணச் செய்கிறோம். ஆனால், இதன் விளைவுகள் தீவிரமானவையாக இருக்கக்கூடும் என்பதற்கு சமீபத்தில் இணையத்தில் வைரலான ஒரு வீடியோ சிறந்த எடுத்துக்காட்டு.

அந்த வீடியோவில், ஒரு குழந்தை மொபைலில் வீடியோ பார்த்துக் கொண்டே சாப்பிட்டு கொண்டிருக்கிறது. அப்போது, அவரது தாயார் உணவில் அதிக அளவிலான எலுமிச்சைச் சாறு பிழிந்து கொடுக்கிறார். இயல்பாக, அந்த உணவு மிகவும் புளிப்பாக இருப்பதால், குழந்தை நேரடியாக அதை சாப்பிட்டிருந்தால் வாயிலேயே அதை துப்பி இருக்கும். ஆனால், மொபைல் ஸ்க்ரீனில் கவனம் சென்று விட்டதால், உணவின் சுவையை உணர்ந்து செயல்பட வேண்டிய மூளை செயலற்ற நிலையில் இருந்துவிட்டது.

மொபைல் ஸ்க்ரீன் அடிக்ஷன் குழந்தையின் உணவுப் பழக்கத்தையே மாற்றியுள்ளது. உணவின் சுவையையோ, வாசனையையோ, தோற்றத்தையோ கவனிக்காமல், சாப்பிடும் நிலைக்கு அந்த குழந்தை வந்துவிட்டது. அந்த குழந்தையின் முகத்தில், அந்த புளிப்பை தாங்க முடியாத காரணத்தால் சிறுமியின் இடது கண் துடிப்பதை காணலாம் இது மிகப்பெரிய ஆபத்து இதனால்
*மூளையின் கவனச் செயல்பாடு குறையும் அபாயம் ஏற்படும்

நமது மூளை, நாம் சாப்பிடும் உணவை அறிந்து செயல்படுகிறது. அது நல்லதா, கெட்டதா, சாப்பிடக்கூடியதா என்பதை நமக்குத் தெரிவிக்கிறது. ஆனால், மொபைல் போன் பார்ப்பது போன்ற கவன சிதறலால் (distraction) மூளை அந்த உணவின் சுவையை கணிக்க முடியாமல் போகிறது. இதனால், புளிப்பு, காரம், தொண்டையில் சிக்கக்கூடிய தன்மை போன்றவற்றை நாம் உணர முடியாமல் தவறு நிகழும் வாய்ப்பு அதிகம்.

 

View this post on Instagram

 

A post shared by Healer Prasanna BHM., D.ACU (@healer_prasanna_)

“>

பெற்றோர்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:

1. உணவின் போது மொபைல் தவிர்க்க வேண்டும்: சாப்பிடும் நேரம், குழந்தையின் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் முக்கியமான நேரம். அவர்கள் உணவை உணர்வுடன் சாப்பிடும் சூழல் உருவாக்க வேண்டும்.

2. உணவு ஒரு குடும்ப நேரமாக இருக்கட்டும்: குடும்பத்துடன் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு நன்மையான உணவுப் பழக்கங்கள் உருவாகும்.

3. மொபைல் தவிர்க்கும் பழக்கம் சிறுவயதிலேயே வளர்க்கப்பட வேண்டும்: ஆரம்பத்திலேயே கட்டுப்பாடு இருந்தால், பின் வரும் காலங்களில் அதற்கான அடிமைத்தனமும் குறையும்.