உத்திரபிரதேச மாநிலத்தில் சைனிக்‌ என்ற பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஜெய் லகானி என்பவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உணவு பரிமாறுவதற்கு வேலைக்கு ஆட்கள் அமர்த்தப்பட்டிருந்த நிலையில் அதில் முபராக் என்ற இளைஞர் இருந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோனு மற்றும் மோகித் ஆகியோர் வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் சாப்பிட சென்ற நிலையில் தங்களுக்கு தேவையான உணவுகளை கொண்டு வரும்படி முபராக்கிடம் கூறினர். அவர் சாப்பாடு எடுக்க சென்ற நிலையில் தாமதமானது. இதன் காரணமாக உணவு வைத்துள்ள இடத்திற்கு சென்று அவர்கள் இருவரும் முபாரக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மோனு தான் வைத்திருந்த துப்பாக்கியால் முபராக்கை சுட்டு கொலை செய்துவிட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.