தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்தவரின் நிலையில் அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நடிகர் ராம்சரண் தற்போது சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு மாலை அணிந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அமீன் பீர் பெரிய தர்காவில் வழிபாடு செய்துள்ளார். இன்று நடைபெற்ற 80-வது தேசிய முஷைரா கஜல் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அழைப்பு விடுத்த நிலையில் அதனை ஏற்று தற்போது அவர் கலந்து கொண்டுள்ளார். அவருடைய வருகையை ரசிகர்கள் மேளதாலத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். கடப்பா நகரம் முழுவதும் ரசிகர்கள் திரண்டனர். மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து கடப்பாவில் ராம்சரண் தரிசனம் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தி உள்ளது.