சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஜனவரி 10ம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை உடனடி முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சபரிமலை வனப்பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்கக்கூடாது. தரிசனம் முடிந்து உடனடியாக மலை இறங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.