
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகரி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார். நேற்று அங்குள்ள ஒரு விநாயகர் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்தது.
இவர் அங்கு மைக் பிடித்து பாடல் பாடிக்கொண்டிருந்தார். அப்போது மைக் வழியாக மின்சாரம் பாய்ந்ததால் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்த நிலையில் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.