
பிரபல இசையமைப்பாளரான இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது கருவறைக்கு முன்பு இருக்கும் அர்த்தமண்டபத்தில் அவர் நுழைய முயன்ற போது அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அர்த்த மண்டபமும் கருவறை போன்றது என கூறி, இளையராஜா தவறுதலாக நுழைந்ததால் உடனே கோவில் நிர்வாகம் அவரிடம் எடுத்து கூறியதாகவும், அவரும் அதனை ஏற்றுக்கொண்டு சாமி தரிசனம் செய்து வெளியே வந்தார் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
எனினும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் அமீர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்திய திருநாட்டின் பிரதமராக இருந்தாலும், தேசத்தின் முதல் குடிமகனாக இருந்தாலும், உலக அரங்கில் இசைஞானியாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதி இல்லை. சனாதனம் தலைவிரித்தாடும் நாட்டில் சமத்துவம் எப்போது மலரும்? என கேள்வி எழுப்பி உள்ளார்.