நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தடம்பதித்துள்ள சந்திரயான் 3 திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகளில் முக்கியமானவர் மணிப்பூரை சேர்ந்த நிங்தவுஜம் ரகு சிங். இந்த திட்டத்திற்காக சுமார் இரண்டு வருடங்களாக தனது குடும்பத்தையும் வீட்டையும் மறந்து ரகு சிங் இந்த பணிகளில் ஈடுபட்டிருந்தார். தற்போது இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியது இந்தியாவின் சிறந்த தருணங்களில் ஒன்று. ககன்யான் திட்டத்தின்படி விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்புவதற்கும் சூரியனை ஆய்வு செய்வதற்கான அத்தியாயத்தின் தொடக்கம் தான் இந்த சந்திரயான் 3 தரையிறக்கம். தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 3 வெற்றி….. அடுத்த இலக்கு இதுதான் – மணிப்பூர் விஞ்ஞானி
Related Posts
2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!
2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…
Read moreமேகி சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!
உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை உயிரிழந்ததுடன் குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மேகி உணவை சமைத்து சாப்பிட்ட நிலையில் அனைவருக்கும் வாந்தி பேதி…
Read more