
மதுரை மாவட்டத்திலுள்ள பனங்காடி பகுதியில் வசிக்கும் மாணவர் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார். அந்த மாணவரை சக மாணவர்கள் கேலி செய்ததாக தெரிகிறது. மேலும் அநாகரிக செயல்களிலும் ஈடுபட்டனர். இதனால் மாணவர் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என பெற்றோரிடம் கூறியுள்ளார். அந்த மாணவனின் தந்தையும் சித்தப்பாவும் தலைமை ஆசிரியரிடம் நேரடியாக சென்று புகார் அளித்தனர். இதனால் தலைமை ஆசிரியை சம்பந்தப்பட்ட மாணவர்களை வரவழைத்து விசாரித்துள்ளார். அதே சமயம் கோபத்தில் பாதிக்கப்பட்ட மாணவனின் சித்தப்பா ஒரு மாணவனை தாக்கியுள்ளார்.
நண்பனை அடித்ததால் கோபமடைந்த சக மாணவர்கள் அவரை கடுமையாக தாக்கினர். உடனே தலைமை ஆசிரியர் இரு தரப்பையும் கண்டித்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் பள்ளிக்கு வந்து விசாரித்தனர். அப்போது மாணவர்கள் கூல் லிப் பயன்படுத்துவதே இது போன்ற பிரச்சனைக்கு காரணம். அதை தடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. மாணவனின் சித்தப்பா மன்னிப்பு கேட்டதால் அவர் மீது அளிக்கப்பட்ட புகார் வாபஸ் பெறப்பட்டது.