
கேரளாவில் பேருந்து ஓட்டுனரின் சாதூர்யத்தால் சிறுவன் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிறது. காசர் கோடு பகுதியில் ஒரு சிறுவன் இருபுறமும் கவனிக்காமல் திடீரென சாலையை கடந்து ஓடி வந்தான்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பேருந்து ஓட்டுனர் பிரேக் பிடித்து சாதூர்யமாக செயல்பட்டு பேருந்தை திருப்பினார். இதனால் நூலிழையில் சிறுவன் உயிர் தப்பினார். திடீரென பிரேக் பிடித்ததால் பேருந்து நழுவி திசை மாறி சென்றது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.