ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த ஜாமுன் பந்தாசாஹி கிராமத்தில் சுடுகாடு ஒன்று அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை 25 வயதான மதுஸ்மிதா சிங் என்ற இளம் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் உடல் எரிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த சடலத்தை மோகன் சிங் மற்றும் நரேந்திர சிங் என இருவர் பிய்த்து சாப்பிட தொடங்கியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மதுஸ்மிதா சிங்கின் குடும்பத்தினர் அவர்களை பிடித்து கட்டி வைத்ததோடு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த படாசாஹி காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் திருமணம் ஆகாத இளம் பெண்களின் சதையை சாப்பிடுவதால் தங்களுக்கு சக்தி கிடைக்கும் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.