இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “Wi அணிக்கு எதிரான எனது முதல் டெஸ்ட் போட்டியின்போது, பயத்தில் இருந்தேன். அப்போது என் அருகில் வந்த சச்சின், உலகக் கோப்பைக்காக 21 வருடங்கள் காத்திருந்ததை நினைவுபடுத்தி ஊக்கப்படுத்தினார். அதன் பிறகு தான் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தேன்” எனக் கூறியுள்ளார்.