உத்தரப்பிரதேச மாநிலம் விரிந்தாவனில் உள்ள பிரசித்தி பெற்ற பிரேம் மந்திரில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், ஒரு தம்பதியர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தயாரிக்கும் போது, ஒரு மூத்த பெண் அவர்கள் நடத்தைப் பற்றி கடும் கண்டனம் தெரிவித்ததாக காணப்படுகிறது. அதாவது ஒரு கணவர் தன் மனைவியின் கால்களை தொட்டு கும்பிடும் காட்சி காணப்படும் அந்த வீடியோவில், அந்த மூதாட்டி அவர்களிடம் இது போன்ற செயற்பாடுகள் பவித்ரமான கோவில் வளாகத்தில் நியாயமல்ல எனக் கூறியதைக் காணலாம்.

மூத்த பெண்மணி தொடர்ந்து கூறுகையில், ஒரு மகன் தனது தாயின் கால்களை மட்டும் தான் தொட்டு வணங்க வேண்டும், மனைவியின் கால்களை தொட்டல் பாரம்பரியமாக ஏற்கப்படவில்லை எனக் கூறினார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பாரம்பரியச் செயல் முறைகள் மற்றும் சமய தளங்களில் சமூக ஊடகப் பயன்பாடு குறித்த விவாதங்களை கிளப்பி இருக்கிறது. சிலர் மூதாட்டியின் கூற்றை ஆதரிக்க, சிலர் அதனை விமர்சித்து வருகின்றனர். மேஙஇவ்வாறு, ஒரு கோயில் வளாகத்தில் நிகழ்ந்த குறும்படப் படமாக்கல் நிகழ்வு, இணையத்தில் பல்வேறு கருத்துகளுக்கு வழிவகுத்துள்ளது.