கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான ‘துனியா’ விஜய் மற்றும் அவரது மனைவி நாகரத்னா இடையேயான நீண்டகாலத் திருமண விவாகரத்து வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்ப வழங்கி விவாகரத்து ஒப்புதலை உறுதி செய்துள்ளது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக நீதிமன்றப் படிகளேறி நடந்து வந்த இந்தத் தம்பதியினரின் குடும்பத் தகராறு, இறுதியில் சட்டப்பூர்வமான பிரிவில் வந்து முடிந்துள்ளது. திரையில் கதாநாயகனாகக் வலம் வரும் நடிகரின் நிஜ வாழ்க்கையில் அரங்கேறிய இந்தத் திருமண முறிவு, சினிமா உலகின் வண்ணமயமான வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் கசப்பான யதார்த்தத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
கடந்த சில வருடங்களாகவே துனியா விஜய் மற்றும் நாகரத்னா இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி, இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், பரஸ்பர குற்றச்சாட்டுகளோடு விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
குடும்ப நல நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விரிவாக விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், இருவருக்கும் இடையே மீண்டும் இணைந்து வாழும் சூழல் இல்லாததைச் சுட்டிக்காட்டி விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு வந்துள்ள இந்தத் தீர்ப்பு, இரு தரப்பிற்கும் ஒரு தீர்க்கமான முடிவை ஏற்படுத்தியிருந்தாலும், அவர்களின் ரசிகர்களுக்குச் சற்றே அதிர்ச்சியையும் சோகத்தையும் அளித்துள்ளது. சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்கள் பொதுவெளிக்கு வரும்போதெல்லாம், சோசியல் மீடியாவில் அது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது.
துனியா விஜய்யின் இந்த விவாகரத்துச் செய்தி வெளியானதில் இருந்தே, திரையுலகப் பிரபலங்களும் நெட்டிசன்களும் இது குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். எத்தனையோ குடும்பப் பிரச்சனைகள், மனக்கசப்புகளுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, சம்பந்தப்பட்ட இருவரின் எதிர்கால அமைதிக்கான வழியாக அமையட்டும் என்று பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
