கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஜனவரி 15ஆம் தேதி சிறப்பு முறையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கேரளத்தின் கொல்லத்திலிருந்து அதிகாலை 1.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். பின்னர் மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 17ஆம் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 5.30 மணிக்கு கேரளத்தின் கொல்லம் சென்றடையும். இந்த சிறப்பு ரயில் போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் பெரம்பூர் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.