தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அரசு மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே சமயம் அனைத்து மருத்துவமனைகளும் 100% முக கவசம் கட்டாயம் என்று அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழந்த பெண்ணிற்கு இணை நோய்கள் இருந்ததால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொது இடங்களில் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காரைக்காலில் ஒன்றை வருடங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.