
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெரும்பூர் கிராமத்தில் ராஜசேகர் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுல் (38) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ராஜசேகரின் தாய் லட்சுமியும் அவர்களுடன் வசித்து வந்தார். ராஜசேகர் சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்திருப்பதால் அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு சென்று தங்கி விட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் அமுலுக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த லட்சுமி தனது மருமகளை கண்டித்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமை லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் லட்சுமி கழுத்தை நெரித்ததற்கான அடையாளங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அமலுக்கும் சரவணனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் காலை அமுல், அவரது தோழி பாரதி, கள்ளக்காதலன் சரவணன் ஆகிய 3 பேரும் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து தாங்கள் 3 பேரும் இணைந்து லட்சுமியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக தெரிவித்தனர். அவர்கள் மூன்றும் பேரையும் கிராம நிர்வாக அலுவலர் போலீசில் ஒப்படைத்தார்.பின்னர் போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.