கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ராயசமுத்திரம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட பொன் பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே காப்புக்காடு பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. வெங்கடேசனின் உயிர் நண்பர் தமிழ்ச்செல்வன்.

தமிழ்ச்செல்வனின் இருசக்கர வாகனம் மாத தவணை தேதி முடியும் தருவாயில் பணத்திற்காக அலைந்து கொண்டிருந்தார்.  வெங்கடேசனின் கழுத்தில் 1 1/4 பவுன் தங்க செயின் இருப்பதை பார்த்துள்ளார். அந்த தங்க செயின் கிடைத்தால் கடன் பிரச்சனையை தீர்த்து விடலாம் என நினைத்து தனது நண்பனுக்கு மூச்சு முட்டும் அளவுக்கு மது வாங்கி கொடுத்துள்ளார். அதன் பிறகு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று தமிழ்ச்செல்வன் வெங்கடேசனை தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் தமிழ்செல்வன் வெங்கடேசனின் உடலில் 16 இடங்களில் கத்தியால் குத்தி கழுத்தறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். பெங்களூரு தப்பி சென்ற தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.