உத்தரபிரதேசத்தில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தின் கே.பி ஆண்கள் விடுதியின் வார்டன் டி.கே சவுகான், தாழ்வாரத்தில் தண்ணீர் சிந்தியதால் மாணவர்கள் இரவு நேரத்தில் தங்கள் அறையை பகிர்ந்ததுள்ளனர். இதன் காரணமாக வார்டன் நான்கு மாணவர்களை தடியால் அடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த காணொளி வெளியானதும், மாணவர்களிடையே கடும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, “இது தனிப்பட்ட செயல் அல்ல; வார்டன் சவுகான் நீண்ட காலமாகவே மாணவர்களிடம் தவறான நடத்தை காட்டி வந்துள்ளார்” என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தர்ணாவில் கலந்து கொண்டுள்ளனர்.

https://x.com/INCPolitician/status/1928319907466289639?t=NqEjpy1kHSjbtrAvNIbVtA&s=19

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் வெளியிடாததால், மாணவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். சமூக வலைதளங்களிலும் இந்த சம்பவம் பெரும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வார்டனை நீக்கக்கோரி மாணவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் உள்ளனர்.