உலகம் முழுவதும் பல கோடி ஜிமெயில் கணக்குகளை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் உள்ள ஜிமெயில் கணக்குகளை அடுத்த மாதத்திற்குள் நீக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பல லட்சம் ஜிமெயில் கணக்குகள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனே உங்களுடைய ஜிமெயில் கணக்கை லாகின் செய்து உங்களது தரவுகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது