நடிகை சமந்தா நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இவர்களுடைய திருமண வாழ்க்கையில் பிரச்சினை வந்ததால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இதனையடுத்து சமந்தா புஷ்பா படத்தில் ஊர் சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களுடைய மத்தியில் தன்னுடைய மார்க்கெட்டை ஏற்றுக் கொண்டார். சமந்தா அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் நடிக்க கமிட்டானார். இதற்கிடையில் அவர் எதிர்பாக்காத சூழலில் மயோசிட்டிஸ் நோய் தாக்கியது .

இதனால் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் தற்போது அதிலிருந்து ஓரளவுக்கு மீண்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது இவர் விஜய் தேவரகொண்டாவோடு குஷி படத்தில் நடிக்க கமிட் ஆனார்.  இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா விஜய் தேவரகொண்டா குறித்து  சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது விஜய் தேவரகொண்டாவிற்கு குஷி படத்திற்கு பிறகு தான் திருமணம் செய்து கொள்ளும் ஆசையே வந்துள்ளதாம். ஏனெனில் இந்த படம் திருமணம் குறித்த படமாக இருப்பதால் இவருக்கு இந்த நேரத்தில் இப்படி ஒரு ஆசை வந்துள்ளது. இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவ இதை பார்த்து நெட்டிசன்ஸ் விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.